கவிதை: அம்மா

R. குருசாமி
பத்து மாதம் சுமந்து என்னைப்
பெற்றெடுத்த தாயே! - உன்
வயிற்றில் நான் இருக்கையிலே
துடிதுடித்தாயோ?
தொல்லைகள் அடைந்தாயோ?
என்னவென்று நான் அறியேன்;
ஒன்று மட்டும் நான் அறிவேன்;
உள்ளத்திலெ துணிவும்,
மனதிலே    திடமும்,
என்   மீது அன்பும்,
பாசமும் கொண்டவலாக
இருக்கிறாய் நீ.

கடவுளை விடவும் உயர்ந்தவள் நீ;
நித்தமும் என்னை நினைப்பாய்,
நித்திரையிலும் எனை மறவாய்;
     தாயே! உன் வாழ்வை
எனக்காக அற்பணித்தாய்.
அற்புதமான  பூவுலகில்
பொக்கிஷமாய் நீ கிடைத்தாய்;
உன் பாசமே என் உயிர்க் கவசம்.

அர்ஜுனனின் வில்லில் இருந்து  கிலம்பி
 எதீரிகளை வீழ்த்தும்   அம்பாய்,
என் மீதான உனது அன்பு;
எனை ஏற்றம் பெற வைத்த
நல் இதயமே!
உன்னில் சிறு துன்பத்தைக் கண்டாலும்
    சிதைந்து போகும் என் உள்ளம்;
உன் சிரிப்பின் ஒலி
என் வாழ்வின் ஒளி.

ஆழ்கடலில் இருந்து எழும்  அலை
வானை  முட்டும்,
தடைகளைத் தகர்த்தெறியும்,
தன்னோடும் இழுத்துக்கொள்ளும்;
அதுபோல்தான் நீயும்
எனக்கு வந்த துன்பங்களைத்
தடுத்து ஆட்கொண்டதோடு,
உன்னை அவை தாக்கும்போதும்
புன்முறுவல் பூக்கின்றாய்.

விருட்சத்தின் இலையானது,
 விருட்சத்திற்கே   சொந்தம்;
அம்மா உன்    அன்பானது,
எனக்கெ   சொந்தம்.
அம்மா உன் அன்பானது
வின்னை முட்டி,
மன்னைப் பிளந்து,
ஓங்கி உயர்ந்த மரத்தைப் போல 
என்னில் நிலையாக    இருக்கிறது.
***
(கவிஞர் மதுரை சுந்தரராஜன் பட்டியில் உள்ள IAB பார்வையற்றோருக்கான மேல்நிலைப்பள்ளியின்  12-ஆம் வகுப்பு மாணவர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக